Wednesday, 10 January 2018

நாடகம்


                                       நாடகம்



     இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ்களில் ஒன்றாக நாடகத்தை முன்னிறுத்தி தொன்று தொட்டு தமிழர் நாடகக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நாடகம் பற்றி பல குறிப்புகள் உண்டு. எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரத்தில் தரப்பட்டிருக்கும் நாடக அரங்கம் பற்றிய குறிப்பு பின்வருமாறு:[1] இக்குறிப்பு தமிழர் அன்றே நாடகத்தின் பல கூறுகளை கவனித்து நாடகம் போட்டதைக் குறிக்கலாம்.


     நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
 கோலளவு இருப்பத்து நல்விர லாக
எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பின தாகி
உத்திரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோ லாக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோன்றிய அரங்கில்....


—அரங்கேற்றக்காதை 99-106-வது வரிகள்

No comments:

Post a Comment