Tuesday, 9 January 2018

நற்றிணை


நற்றிணை

   இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. நற்றிணையை தொகுத்தவர்  பெயர் தெரியவில்லை.
நற்றிணை நூலைத் தொகுப்பித்த அரசன் பாண்டியன் மாறன் வழுதி.
தொண்டி என்பது சேர நாட்டு துறைமுகம். மாந்தை என்பது சேர நாட்டு கடற்கரை ஊர் என்பது போன்ற செய்திகள் நற்றிணையிலிருந்து அறியப்படுகின்றன.
குறுந்தொகை
இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.
குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து முருகனை பற்றியதாகும்.
குறுந்தொகையிலிருந்து  அறியும் செய்திகள் .
அதியமானின் தலைநகரம் தகடூர்.
கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரி.
திருக்கோவிலூரையும் முள்ளூரையும் ஆட்சி செய்த மன்னன் மலையமான் திருமுடிக்காரி.
கரிகாலனுக்கு திருமாவளவன் என்ற பெயரும் உண்டு.
கரிகாலனின் மகள் ஆதி மந்தி.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்று தொடங்கும் பாடலை இயற்றியவர் இறையனார்.

No comments:

Post a Comment